Saturday, December 17, 2011

sivan

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்







ஸ்ரீ தேனுகாம்பாள் சமேத ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் - மாடம்பாக்கம்

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவநச் ஜடைமுடித் தாமரையானே.

---- திருமூலர்.

ஆத்மீக சக்தியின் உறைவிடமாகத் திகழ்வது பாரத தேசம். தருமம் தழைக்கும் இப்பாரத நாட்டின் தென்னாட்டில் என்நாட்டவர்க்கும் இறைவனாக சென்னை அருகில், மாடம்பாக்கம் எனும் கிராமத்தில் அம்மையோடு அப்பனாக அருள்புரிகிறார் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர். தேனு என்றால் தெய்வீகப் பசு என்று பொருள். கபிலர் தெய்வீகப் பசுவாக மாறி வழிபட்ட தலமாகையால் இவர் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரமான கபில மகரிஷி, பலகாலம் பூமியில் தன் தெய்வீகக் கடமைகளை ஆற்றிவிட்டுப் பின் தன் பிறவியின் தொடர்பை நீக்கி, முக்திநிலை காணும் பொருட்டு தவம் இருந்து சிவ வழிபாடு செய்து வந்தார். அப்போது வழக்கத்திற்கு மாறாகத் தன் இடது கையில் லிங்கத்தை வைத்துக் கொண்டு வலது கரத்தால் சிவபூஜை செய்தார். இதனால் ஏற்பட்ட தோஷத்தால் முக்திபேறு கிடைக்கவில்லை. பின் பசுவாக உருவெடுத்து ஒரு கிராமத்தில் பசுக்கூட்டங்களுடன் சேர்ந்து மேய்ந்து வந்தார். தெய்வீகப் பசுவாகிய கபிலர் அவ்விடம் உள்ள சுயம்பு லிங்க மூர்த்தியின் மேல் பால் சொறிந்து, தினமும் காமதகன மூர்த்தியான ஈசனை வழிபட்டு வந்தார். ஒருநாள் இதைக் கண்ட இடையன் பசுவின் மடியில் தன் கையில் வைத்திருந்த தடியால் அடிக்க காம்பில் இருந்து இரத்தம் வடிந்தது. வலி தாங்க முடியாத பசு தன் காலை எட்டி உதைக்க அது லிங்கத்தின் மேல் பட, லிங்க மூர்த்தியின் மேல்ப்பகுதி சிதிலமாக, இரத்தம் பெருகி அறாக ஓடிக் குளத்தின் நீரோடு கலந்துபோனது. இடையன் இதை ஊர் மக்களிடம் சொல்லி அவர்களை அவ்விடம் அழைத்து வந்தான். மக்கள் கலங்கி நிற்கும்போது, ஆகாயத்தில் தோன்றிய உமாபதியாகிய சிவபெருமான் " மக்களே பயம் வேண்டாம், கபிலரின் தோஷம் நீங்கவே யாம் இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோண்றினோம் " என்று கூற, கபிலரும் இறைவனிடம், தன்னை மன்னித்தருளுமாறு வேண்டினார். அருள் வடிவான மகேசுவரரும் கபிலருக்கு அருள் செய்ய அவர் ஜோதிவடிவமாக இறைவனுடன் கலந்தார்.

இறைவனின் அருளால் இத்துனை நிகழ்ச்சிகளும் சோழ மன்னனின் கனவிலும் தோன்ற, சோழர்கோனும் அவ்விடம் வந்து நடந்தவை அறிந்து இறைவனுக்கு அங்கு ஒரு ஆலயம் அமைத்தான். இக்கோவில் பின்னர் பாண்டிய மன்னர்களாலும், பல்லவ மன்னர்களாலும் திருபணி செய்விக்கப்பட்டது. இகோவில் மிகவும் நேர்த்தியான சிற்பக்கலையுடம் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகனை வழிபட்டு திருப்புகழ் பாடியுள்ளார். பல சித்தர்கள் வாழ்ந்து பூஜித்த தலம் இது.

இங்குள்ள தூண்களின் நாற்புறமும் சிற்பக்கலை நயத்துடன் பல தெய்வ உருவங்கள் செய்யப்பட்டுள்ளன. மிக அருமையாகச் செதுக்கப்பட்ட வீரபத்திரர், நரசிம்மர், வாமணர், அர்த்தநாரீஸ்வரர், கஜசம்ஹார மூர்த்தி, ஹயக்ரீவர், சோமஸ்கந்தர், சங்கரநாராயணர், சரபேஸ்வரர் மேலும் பல உருவங்களும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

இங்கு நான் சிறப்பாகப் பார்த்த விடயங்கள் மூன்று. முதலில் இங்கு அம்ப்பாள் சன்னதி அருகே உள்ள கபிலரின் சுவர் சிற்பம். கபிலர் இதில் இடது கையில் லிங்கத்தோடு காட்சி தருகிறார், மிக அருமையான, தத்ரூபமான சிற்பம். அடுத்தது மூலவர் சன்னதி அருகே உள்ள பிரம்மா - விஷ்ணு சிவனின் அடி முடி தேடும் தூண் சிற்பம். இச் சிற்பத்தின் அழகை என்னவென்று சொல்ல....வார்த்தைகள் இல்லை வர்ணிக்க....பிரம்மா அன்னப் பறவையாகவும், விஷ்ணு வராகராகவும் இறைவனின் அடி முடி தேடுவதை அவ்வளவு அருமையாகச் செதுக்கியிருக்கிறார்கள். மூன்றாவதாக, மண்டபத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் சிற்பம். ஐந்து முகமும் நேர் கோட்டில் இருக்க..காற்றின் மைந்தன் காற்றோடு காற்றாக என் மனதில் கலந்த இன்பத்தை எவ்வாறு வார்த்தைகளில் சொல்வது !!!! படங்கள் எடுக்க அனுமதிக்காது ஒரு மிகப் பெரிய குறை, இல்லையேல் உங்களுக்கும் ஈசன் புதல்வன், அஞ்சனை மைந்தன் அனுமனின் திருவுருவம் காணும்படி செய்திருப்பேன்.......

இத்திருக்கோவில் மிக அருமையாக பராமரிக்கப்படுகிறது. ஆலயத்தின் அருகில் உள்ள கபிலதீர்த்தமும் மிக அருமையாக உள்ளது. மிக அமைதியான சூழலில் என் அப்பன் உலகநாதன் என்னைத் தாலாட்டுவது போலவே இருந்தது. மனதிற்கு இதமான தெய்வீகச் சூழல் இங்கு நிலவுகிறது.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம், இங்கு நான் கண்ட பல சரபேஸ்வரர் சிற்பங்கள். ஏனைய ஆலங்கள் போல் இல்லாமல் இங்கு பல இடங்களில் சரபேஸ்வரர் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றது. ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் சரபர் சிற்பங்கள் பார்த்தாக ஞாபகம். இங்கு சரபர் ராகு காலப் பூசை மிகவும் சிறப்பானது.

இக்கோவிலின் அருகில் இன்னொரு முக்கியமான விடயம் உள்ளது, அது பதிணென் சித்தர் சக்திபீட பிருந்தாவனம். இது தெய்வ அருள் பெற்ற சித்தர்களுக்கான கோவில். மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சித்தருக்கும் தனித்தனிச் சன்னதி. இங்கு நித்திய அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு சக்திபீடம், ஐய்யப்பன் சன்னதி, கோதண்டராமர் சன்னதிகளும் உண்டு. மிக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறத்து. இது திரு சேஷாத்ரி சுவாமிகள் டிரஸ்ட் ( www.seshadri.info ) மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு சன்னதியாக நான் வழிபட்டுவரும் போது போகர் சன்னதி முன் சென்றதும் ஒரு நிமிடம் என் மூச்சே நின்றுவிட்டது போல் ஆகிற்று, உணமையாகவே போகர் அங்கு அமர்ந்திருப்பது போன்ற ஒரு சிறபம், என்ன ஒரு நேர்த்தி...போகரை நேரே பார்த்தது போல ஒரு பிரமிப்பு. துலாபாரமும் இங்கு உண்டு. தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் முன்னே ஒரு சிறிய ஷீரடி சாய்நாதரின் ஆலயமும் உண்டு. இங்கிருந்தி ஒட்டியம்பாக்கம் எனும் ஒரு கிராமம் உள்ளது, அங்கு ஒட்டீஸ்வர் ஆலயம் உள்ளது ( லிங்கம் இங்கு சற்று உயரமாக இருக்குமாம் ) நேரமின்மை காரணத்தால் இக்கோவிலுக்குச் செல்ல இயலவில்லை. நிச்சயம் ஒருநாள் என்னை அங்கு அழைப்பார், உமாமகேசர்.

இதற்கு அடுத்து நான் சென்றது " சித்தாலப்பாக்கம் " எனும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவில். இது மாடம்பாக்கத்தில் இருந்து 5 கி.மி. தூரத்தில் உள்ளது. இது சிறிய கோவிலாக இருந்தாலும், மிக அழகாக இருந்தது. அமைதியான சூழல் மனதிற்கு இதமாக இருந்தது. சித்தலப்பாக்கம் என்பது முற்காலத்தில் சித்தர்கள் மிக அதிக அளவில் இருந்த இடம். சித்தர்கள் பாக்கம் என்பதே மருவி " சித்தாலப்பாக்கம் " என்று ஆகிவிட்டது. இக்கோவில் தனி நபரால் கட்டப்பட்டது. விரைவில், ஸ்ரீ இராமச்சந்திர மூர்தியின் அருளாலும் குரு ஸ்ரீ ராகவேந்திரர் அருளாலும், இக்கோவில் விரிவடைந்து மேலும் சிறப்படையும் என நம்புகிறேன்.

அம்மைஅப்ப ரேஉலகுக் ( கு ) அம்மை அப்பர் என்று அறிக
அம்மை அப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மை அப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.

- திருக்களிற்றுப்படியார்.

சக்தியும் சிவமும் என இரு தன்மையை உடைய சிவபெருமானே, உலகிற்குத் தாயும் தந்தையும் ஆவார். அவ்வாறு தாயும் தந்தையுமாக விளங்கும் அம்மையப்பர் உலகில் உயிர்களின் பக்குவத்திற்கேற்ப அருள்புரிவர். அத்தகைய தாயுமானவரான ஈசன் உலகின் எல்லாப பொருள்களிலும் கலந்து நிற்பர் ஆயினும் அவற்றின்பால் கட்டுண்ணப்படார். அவ்வாறாகிய தாண்டவக்கோனின் திருப்பாதங்களைப் பணிந்து என்றும் நலம் பெருவோமாக.
கடவுள்' இருப்பது உண்மை தான்!!

கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தட்ஸ்தமிழ் வாசகர்கள் இது குறித்த எனது முந்தைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள்.

அதை படிக்காதவர்கள், அல்லது மீண்டும் படிக்க விரும்புவோர் 'Higgs Boson'! கடவுளே! (/editor-speaks/2008/09/09-world-biggest-physics-experiment.html), கடவுளின் அணுத் துகளைத் தேடி...பயணம் ஆரம்பம் (/editor-speaks/2010/03/31-atom-smasher-achieves-big-bang-collisions.html) ஆகிய கட்டுரைகளை ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைத்துள்ள Large Hadron Collider என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை தொடங்கியது. (அதற்கு ஓராண்டுக்கு முன்பே சோதனை தொடங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதன் குளிரூட்டு்ம் கருவிகளில் பிரச்சனை வந்ததால், அதை சரி செய்து சோதனையை ஆரம்பிக்க ஓராண்டு ஆகிவிட்டது).

கிட்டத்தட்ட 400 டிரி்ல்லியன் புரோட்டான்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.

இருவருக்கும் கிடைத்துள்ள ஒரே ரிசல்ட்.... 'Higgs Boson' இருக்கிறது என்பது தான்.

அது என்ன 'ஹிக்ஸ் போஸன்'?:

ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.

இதனால், புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு 'வெயிட்டான' சமாச்சாரமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'.

இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது.

இதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.

டிரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.

இங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.

இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

'ஹிக்ஸ் போஸனிடம்' ஸாரி.. கடவுளிடம் பாரத்தை போட்டு விட்டு காத்திருப்போம்..!

இதனின் ஆங்கில விரிவாக்கம்
God Particle? - Scientists Found Building Block Of Universe

Scientists find signs of ’God particle’

FunFunky.Com
Geneva: Scientists said on Tuesday they had found signs of the Higgs boson, an elementary particle believed to have played a vital role in the creation of the universe after the Big Bang.

Scientists at the CERN physics research centre near Geneva said, however, they had found no conclusive proof of the existence of the particle which, according to prevailing theories of physics, gives everything in the universe its mass.
FunFunky.Com
"If the Higgs observation is confirmed...this really will be one of the discoveries of the century," said Themis Bowcock, a professor of particle physics at Britain's Liverpool University.

"Physicists will have uncovered a keystone in the makeup of the Universe...whose influence we see and feel every day of our lives."

The leaders of two experiments, ALTAS and CMS, revealed their findings to a packed seminar at CERN, where they have tried to find traces of the elusive boson by smashing particles together in the Large Hadron Collider at high speed.
FunFunky.Com
"Both experiments have the signals pointing in essentially the same direction," said Oliver Buchmueller, senior physicist on CMS. "It seems that both Atlas and us have found the signals are at the same mass level. That is obviously very important."

Fabiola Gianotti, the scientist in charge of the ATLAS experiment, said ALTAS had narrowed the search to a signal centred at around 126 GeV (Giga electron volts), which would be compatible with the expected strength of a Standard Model Higgs.
FunFunky.Com
"I think it would be extremely kind of the Higgs boson to be here," she told a seminar to discuss the findings. "But it is too early" for final conclusions, she said. "More studies and more data are needed. The next few months will be very exciting...I don't know what the conclusions will be."




--


தூத்துக்குடியின் வரலாறு
முதல் வரலாற்றுக் - குறிப்பு
1. தூத்துக்குடி முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு.123ல் தாலாமி என்ற கிரேக்க பயணி எழுதிய நூலில் சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
2. கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
4. தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
பிற்கால பாண்டியர்கள் காலம் ஆட்சிவரை
இந்தியாவில் ஒருசில நகரங்களில்தான் தொடர்ச்சியாக கவர்ச்சியான வரலாறு உள்ளது. பண்டைய காலத்தில் வணிக மையங்களாகவும், நாகரீகத்தின் தொட்டில்களாகவும் விளங்கிய துறைமுகங்களெல்லாம் நலிவுற்று வீழ்ச்சியடைந்து விட்டது. அதையும் மீறி வெற்றிநடை போட்டு வளர்ச்சி பாதையில் வளர்ந்துவரும் நகரம் தூத்துக்குடியாகும். அதற்கு காரணமாக அமைந்திருப்பது தூத்துக்குடி துறைமுகமாகும்.

தூத்துக்குடி வரலாற்றில் நமது பாண்டியர்களின் வரலாறு, முகமதியர்களின் படையெடுப்பின் பாதிப்பு, நாயக்கர்களின் ஆட்சி, காலணி ஆதிக்கத்தின் அன்னிய நாடுகளின் ஆக்கிரமிப்பு போட்டிகள், ஆங்கிலேயர் ஆட்சி, சுதந்திரபோராட்டம், நவீன கால அபிவிருத்தி திட்டங்கள் பிரதிபலிப்பை எல்லாம் காணலாம்.

கிபி 7வது நூற்றாண்டு முதல் 9வது நூற்றாண்டு வரை தூத்துக்குடி பாண்டிய மன்னர்கள் ஆட்சியிலிருந்தது. கிபி 10ம் நூற்றாண்டு முதல் 12வது நூற்றாண்டு வரை சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. கிபி 1026ல் இலங்கை மேல் படையெடுத்த சோழ மன்னன் தூத்துக்குடியிலிருந்துதான் படையெடுத்திருக்க வேண்டும் என வரலாற்றுச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இக்கால கட்டத்தில், நீண்ட காலமாக தூத்துக்குடி கடல் வாணிபத்திலும், முத்துக்குளிப்பதிலும் ஒரு மைய நகரமாய் விளங்கியிருக்கிறது. இதற்கு முன்பு கொற்கைதான். ஒரு கடல் துறைமுகமாக அமைந்து அங்குதான் அரேபிய வியாபாரிகள் தங்கள் குதிரை வியாபாரத்தை தங்கள் ஏஜெண்டுகள் மூலம் நடத்தி வந்திருந்தனர். தாமிரபரணி நதியின் முகத்துவாரத்தில் கொற்கை இருந்ததால், மணல்மேடுகள் விளைவாக கொற்கையின் முக்கியத்துவம் குறைந்து அதற்கு பதில் காயல் என்னும் துறைமுகம் தோன்றியது.
கொற்கைக்கு நேர்ந்த கதியே காயலுக்கும் நேர்ந்தது. இதன் விளைவாகவே கிபி1400ல் தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாக மிளிர துவங்கியது. அங்கே சகல பாதுகாப்பும் உள்ள ஒரு இயற்கை துறைமுகம் இருந்ததால் கப்பல்கள் பயமின்றி அங்கு நங்கூரம் போட முடிந்தது எனவே தூத்துக்குடி கடல் வணிகத்திற்கும், துறைமுக வசதிக்கும் சிறப்பு பெற்றது இயல்பே.
பரவர்கள் (Paravas):
தூத்துக்குடியின் ஆதிகுடிகள் என்று அழைக்கப் படுகின்றவர்கள் "பரதவர்கள்". இவர்களது முக்கியத் தொழில் முத்துக் குளித்தலாகும். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்திலிருந்து இவர்கள் முத்துக்குளித்தல் தொழில் செய்ததாகவும், பாண்டிய மன்னரின் குடிகளாகவும் விளங்கியதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. பிறகு வந்த சோழர்களும் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதால் அவர்களுக்கு வரி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
பிற்கால பாண்டியர்கள் காலத்தில் காயல்பட்டிணத்தில் வியாபாரம் செய்த "மூர்கள்" என்ற அரபியர்கள் பாண்டிய மன்னர்களுக்கு வேண்டிய குதிரைகளை வழங்கியதாகவும், அதற்கு பதிலாக முத்துக்கள் பெற்றுக் கொண்டதாகவும், பிறகு பாண்டிய மன்னர்கள் அரசாங்கத்தில் சில முக்கிய அங்கத்தினர்களாக இடம் பெற்று விளங்கியதாக கூறப்படுகின்றன. இவர்களில் சிலர் காயல்பட்டிணத்தில் திருமண உறவுகளை அங்கு இருந்தவர்களுடன் ஏற்படுத்தி நிரந்தர குடி மக்களாக மாறினர்.
இக்காலகட்டத்தில் வட இந்தியாவிலிருந்து டெல்லி சுல்தான் ஆலாவூதினின் படையெடுப்புகள் தென்னகத்தில் ஏற்பட்டது. ஆலாவுதினின் தளபதி மாலிக்கபூர் பாண்டிய மன்னர்களை தோற்கடித்து மதுரை சுல்தானியத்தை ஏற்படுத்தினான். இஸ்லாமியர்களின் ஆதிக்கம் மதுரையில் ஏற்படுத்தியதன் விளைவாக, காயல்பட்டிணத்தில் தங்கிய மூர்கள், பரவர்கள் நெடுங்காலம் தொட்டு செய்துகொண்டிருந்த முத்துக் குளிதல் தொழிலில் ஈடுபடலாயினர். இதனால் முத்துக்குளித்தலில் போட்டிகள் பிறகு சண்டைகள் ஏற்பட்டு பரவர்களை பல வகையில் துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். இப்படியிருந்த சூழ்நிலையில்தான் போர்ச்சிகீசியர்களின் ஆதிக்கம் கொச்சியில் கிபி1502ல் ஏற்படுத்தப்பட்டன.
மூர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மறைபணியாளர் "மனுவேல் டி எளியாஸ்" என்பவரின் ஆலோசனைப்படி பரவர்களில் முக்கியமானவர்கள் என்று அழைக்கப்படும் "சாதி தலைவர்கள்" கொச்சினுக்கு சென்று அங்கு போர்ச்சிக்கள் கேப்டன் "Dr.பிடாரோ டி அமராலிடம்" தங்களின் குறைகளை முறையிட்டனர். போர்ச்சுக்கள் மன்னன் மூன்றாம் ஜானும் பரவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு கட்டளைப் பிறப்பித்தான். போர்ச்சுக்கல் அரசு உதவி செய்ததால் பரவர்கள் கிறிஸ்துவ மதம் மாற சம்மதித்தனர்.
அதன்படி, கொச்சியிலிருந்து கேப்டன் "ஜோ பிதேலிஸ்" என்பவரின் தலைமையில் போர்ச்சிக்கல் படையொன்று தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டது. படையுடன் கோவாவின் பிஷப் "மைக்கேல் வாஸ்சும்" சேர்ந்து அனுப்பப்பட்டார்.
தூத்துக்குடி வந்துசேர்ந்த போர்ச்சுக்கல் படை மூர்களை முழுவதுமாக தோற்கடித்து துறைமுகத்தை மூர்களிடமிருந்து மீட்டு பரவர்களிடம் கொடுத்தது. எந்த விதமான முகமாற்றமும் இல்லாமல் பரவர்கள் கிருஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.
தூத்துக்குடி கிபி 1532லிருந்து 1658 வரை போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இங்கு ஒரு நிலையான இராணுவம் நிறுத்தப்பட்டு கோட்டைகள் கட்டப்பட்டது. முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது. போர்ச்சுக்கல் மன்னனுக்கு வரி செலுத்தப்பட்டு துறைமுகம் உருவாக ஆரம்பித்தது.
தூத்துக்குடியில் டச்சுக்காரர்கள் (கிபி 1658-1825)
தூத்துக்குடி போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்தபோது "புனித சவேரியாரின்" அருட் தொண்டால் தூத்துக்குடியின் அருகில் உள்ள பகுதிகளிலும் கிருஸ்துவ மதம் பரவியது. முத்துக்குளித்தலும் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போதுதான் டச்சுக்காரர்கள் தங்கள் வியாபார தலத்தை இலங்கையில் கிபி1602ல் ஏற்படுத்தினர்.
இதுவரை ஐரோப்பாவில் கடல் வணிகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆங்கிலேயரும், டச்சுக்காரரும் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் தலைகாட்டவில்லை. அதற்கும் ஒரு காரணம் உண்டு. அந்த காலத்தில் ஐரோப்பா முழுவதும் ஒரு கிருஸ்தவ மரபை பின்பற்றியதால் உலக கத்தோலிக்க மதகுரு போப்பாண்டவர் ஆறாம் அலெக்சாந்தர் வெளியிட்ட ஓர் ஆணையின்படி உலகில் கடல் கடந்து வியாபாரம் செய்யும் உரிமைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிக்கப்பட்டன.

கீழ்த்திசை நாடுகளில் வியாபார உரிமை போர்ச்சுக்கலுக்கும், மேல்திசை நாடுகளில் அவ்வுரிமை ஸ்பெயினுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதசீர்திருத்த இயக்கத்தால் கிறிஸ்தவ மதம் பிளவுபட்டது. போப்பாண்டவரின் அதிகாரமும் செல்வாக்கும் முன்போல் செயல்படவில்லை.

இந்த பின்னனியில் போப்பின் அதிகாரத்தை உதறிய ஆங்கிலேயரும், டச்சுகாரரும் வியாபார மையங்கள் அமைக்க கீழ்நாடுகளுக்கு வரத் துவங்கினர். இந்தக் காலக்கட்டத்தில்தான் தூத்துக்குடி ஒருவர் கைமாறி மற்றொருவர் கைக்கு போகக்கூடிய நிலை ஏற்பட்டது.
போர்ச்சுக்கீசியர் தூத்துக்குடியில் நடத்திய அமைதியான, லாபகரமான வியாபாரம், டச்சுக்காரர்களின் பொறாமைக்கு இலக்கானது. கிபி1649ல் பிப்ரவரி மாதம் 4ம் நாள் ஆளுநர் ஜெ.எம்.சுவிட்சரின் இராணுவ தளபதியின் தலைமையில் டச்சு, சிங்கள போர் வீரர்களுடன், பத்து கப்பல் கொண்ட ஓர் பெரிய கப்பல் படையை அனுப்பி தாக்கினார்கள். கடற்கரை வழியாக வந்து தூத்துக்குடியை திருச்செந்தூர் கோயிலையும் கைப்பற்றி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.
மீண்டும் 1658ல் ஒரு வலிமை மிக்க படையெடுப்பு செய்து தூத்துக்குடி துறைமுகத்தை தாக்கி பிடித்துக்கொண்டனர். தூத்துக்குடியை "மதுரை கடற்கரை"யின் தலைமையிடமாக அமைத்துக் கொண்டனர். இந்த மதுரை கடற்கரையில் அடங்கியுள்ள கிராமங்கள், வேம்பார், வைப்பார், புன்னக்காயல், காயல்பட்டினம், பழையகாயல், மணப்பாடு, ஆழ்வார்திருநகரி போன்றவையாகும். முத்துச்சிப்பி துறை தூத்துக்குடியை மேற்பார்வையிட ஓர் அரச படை அதிகாரியை நியமித்தனர்.

பாம்பனிலிருந்து கன்னியாகுமாரி வரையுள்ள வீரர்களையும், வலிமையுள்ள ஓர் தளபதியையும் கொண்ட கப்பற்படை ஒன்றை இங்கு நிலைநிறுத்தி வைத்தனர்.
கிபி 1650 முதல் 1700 வரை தூத்துக்குடியின் நகரம், துறைமுகம், முத்துக்குளித்துரை இவைகளின் வரலாற்றை அறிய ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. 5,000 மக்கள் வசித்த தூத்துக்குடிதான் அன்று கடற்கரையிலுள்ள 7 கிராமங்களில் மிக புகழ்பெற்றதாகயிருந்தது.
தூத்துக்குடி துறைமுகம் 18அடி ஆழமுள்ளதாகச் சொல்ல்பபடுகிறது. அக்டோபர் மாதம் கடலில் அமைதி நிலவும்போது கடலிலிருந்து 78முதல் 90அடி ஆழ தூரத்தில் முத்துக்குளிப்பு தொழில் நடந்தது. 1675ல் தூத்துக்குடி துறைமுகம் கம்பீரமான தோற்றமுடைய துறைமுக நகரம் உருவாகியது.
தூத்துக்குடியில் ஆங்கிலேயர்கள்
கிபி 1782ல் ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனிக்கும், டச்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கும் போராட்டங்கள் கடுமையானது. ஆங்கில கம்பெனியின் இராணுவ ஆலோசகர் கர்னல் டோனால்ட் கம்பெல்லும், திருநெல்வேலி கலெக்டர் பவுணியும் டச்சு கம்பெனியாரை உடனே அடிபணியும்படி ஆணையிட்டனர்.

ஓரு எதிர்ப்புமின்றி அவர்கள் உடனே சரணடைந்தனர். இதற்குபின் தூத்துக்குடி சிறிதுகாலம் ஆங்கிலேயரின் ஆளுகையிலேயே இருந்தது. கிபி 1810ல் கர்னல் டயசை அனுப்பி தூத்துக்குடியில் டச்சு கோட்டை தளவாடங்களை எல்லாம் தரைமட்டமாக்கினர்.

17ம் நூற்றாண்டில் புராட்டஸ்டண்ட்

கிபி 1542ல் புனித பிரான்சிஸ் சேவியர் என்ற ரோமன் கத்தோலிக்க மிஷனரி கன்னியாகுமரியை மையமாகக் கொண்டு ஊழியம் செய்து வந்ததோடு பல ஊழியர்களையும் அதன் சுற்றுப்புற கடற்கரைப் பகுதிகளுக்கு அனுப்பி ரோமன் கத்தோலிக்க சபையை நிருவினார்.

17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த டச்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் வியாபார நோக்கோடு தூத்துக்குடி வந்தனர். பல எதிர்ப்புக்களுக்கு இடையே மீனவர்கள் மத்தியில் புராட்டஸ்டண்ட் சபைகளை நிருவ முயன்று தோல்வி அடைந்தனர். 1750ல் தாங்கள் ஆராதிப்பதாற்காக தற்போது ஆங்கில ஆலயம் என்று அழைக்கப்படும் பரிசுத்த திரித்துவ ஆலயத்தை கட்டினர். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் நடைபெற்ற ஆராதணையில் பங்குபெற்றவர்களில் கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்கள், மிஷனரி ரிங்கள் தோபே மற்றும் போராயர் கால்டுவெல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

1789ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்த டச்சு கவர்னரின் வேண்டுகோளை ஏற்று கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்கள் தரங்கம்பாடியிலிருந்து ராயப்பன், சத்தியநாதன் என்ற மிஷனெரரிகளை இப்பகுதியில் ஊழியம் செய்ய அனுப்பினார். இவர்களின் ஊழியத்தினால் 272பேர் ஞானஸ்தானம் பெற்று புராட்டஸ்டண்ட் திருச்சபையில் இணைந்தனர். வெகு காலமாக இவர்களுக்கு இவ்வாலயத்திலேய தமிழில் ஆராதணை நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் இந்த சபை 1789ம் ஆண்டு நிறுவப்பட்டது.
19ம் நூற்றாண்டில் தூத்துக்குடி
19ம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் தூத்துக்குடி வனிக உலகில் ஓர் மதிப்பான நிலையை எய்தியது. நகரத்தின் உற்பத்திபொருட்கள் ஒருபக்கம் வளர, அதன் பின்னணி (Hintedland) பிரதேசத்திலுள்ள கணிசமான மக்கள் தொகைக்கு வேண்டிய நுகர்வு பொருட்களையும், தொழில்களுக்கு வேண்டிய மூலப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியில் ஓர் இயற்கை துறைமுகம், அதன்பின்புறம் வணிக செல்வத்தைப் பெருக்க ஓர் வளமான பிரதேசம் இருப்பதைக் கண்ட ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனி, தூத்துக்குடி துறைமுகத்தை மேம்பாடு செய்யத் திட்டமிட்டது.

1842ல் டச்சுக்காரர்கள் முயல்தீவில் கப்பலுக்கு வழிகாட்டும் கோபுரத்தை அகற்றி ஓர் கலங்கரை விளக்கை உருவாக்கியது. தூத்துக்குடி துறைமுக வளர்ச்சித் திட்ட வரலாற்றின் ஆரம்பம் என்று கூறலாம். வியாபாரம் துறையில் பல தீவிர மாற்றங்கள் ஏற்பட்டதால், இந்திய துறைமுகங்களில் தூத்துக்குடிக்கு ஓர் தனி சிறப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி நகர வளர்ச்சி
தூத்துக்குடி புரட்சிகரமாக வளர்ச்சியடைந்ததால், அதை ஓரு முனிசிபல் நகரமாக உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1866ம் வருடம் நவம்பர் 1ம் தேதியில் தூத்துக்குடி முனிசிபாலிட்டி ஸ்தாபிக்கப்பட்டது. 1870ம் ஆண்டு ஒரு சிறு மருத்துவ நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1883ல் சேசு சபை குருக்கள், புனித சவேரியார் கல்வி நிலையத்தை தொடங்கினார்கள். அதே ஆண்டில் எஸ்.பி.ஜீ.மிஷனை சேர்ந்தவர்கள் கால்டுவெல் பள்ளியை ஸ்தாபித்தனர். கால்டுவெல்லின் தொடர்பாக இறை இயல் கற்றுக்கொடுக்க சாயர்புரத்தில் டாக்டர் ஜி.யு.போப் ஓர் கல்லூரி பிரிவை அமைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்றத்தின் வேலைப் பளுவை குறைக்க தூத்துக்குடியில் 1873ல் ஒரு உபநீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 1876-ல் தூத்துக்குடிக்கும் மணியாச்சிக்கும் ரயில் பாதை தொடர்பு, மாவட்ட உள் பகுதிக்கெல்லாம் ரோடுகள் தூத்துக்குடியுடன் இணைக்கப்பட்டன.
தூத்துக்குடி துறைமுகத்தின் திட்டமிட்ட வளர்ச்சி
1842ம் ஆண்டுதான் தூத்துக்குடி துறைமுகம் ஆங்கிலேயரால் முதன்முதலில் ஆய்வு (சர்வே) நடத்தப்பட்டது. அதன் பிறகுதான் திட்டமிட்ட வளர்ச்சி பணி மேற்க்கொள்ளப்பட்டது. 1866ல் முதல் வளர்ச்சி நிகழ்ச்சியாக ஒரு சிறு அலைதாங்கி (Jetty) 1200 ரூபாயில் கட்டப்பட்டது. அது கடலுக்குள்ளே ஒரு 100 அடி நீளமுள்ள மரப்பலகையால் செய்யப்பட்ட ஓர் அமைப்பு.

1873ல் அந்த அலை தாங்கியை மீண்டும் நீளப்படுத்தி பலப்படுத்தினார்கள். 1877ல் பிரிட்டிஸ் இளவரசர் "பக்கிங்ஹாம் பிரபு" தூத்துக்குடிக்கு விஜயம் செய்தபொழுது தூத்துக்குடி ஆங்கில வியாபாரிகள் அவரை சந்தித்து அந்த சிறிய பழைய துறைமுகத்தை நவீனமாக்க விண்ணப்பித்தனர். அவரும் ஆவண செய்வதாக வாக்குறுதியளித்தார். 1881ல் அவர் வாக்குறுதி செயல்படுத்தப்பட்டது.

அலைதாங்கி இன்னும் பலப்படுத்தப்பட்டு, 1887ல் அதன் அகலம் இரண்டு மடங்காக ஆக்கப்பட்டது. அதே வருடத்தில் (1887) தூத்துக்குடி ரயில் நிலையத்தோடு அதை இணைத்து "டிராலி" என்னும் ஓரு் இலேசான ரயில் தண்டவாளங்கள் வழி ஓடும் வசதி செய்யப்பட்டது. 1894ம் ஆண்டு இரும்பு கம்பிகளின்மேல் கட்டப்பட்ட ஒரு புதிய அலைதாங்கி அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது.

கடல் வானிபம் தீவிரமாக வளரவே கடற்கரையின் முன்பாகத்தையெல்லாம் தரையாக மாற்றி, புதிய அலைதாங்கிக்கு போக்குவரத்து மார்க்கங்கள் போடப்பட்டன. இந்த புதிய அமைப்புகளுக்காக 2லட்சம் ரூபாய் செலவு செய்யபட்டன. 1895ம் வருடம் ஜூலை மாதம் 13ம் தேதி மாற்றமடைந்த புதிய அலைதாங்கி துறைமுக பணிகளுக்காக திருக்கப்பட்டன. 1899ல் தென் இந்திய இருப்புபாதை துறைமுக மேடை வரை விரிவாக்கப்பட்டது.
தூத்துக்குடியில் பஞ்சாலைகள்
பருத்தி ஏற்றுமதி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு போகவே, ஆங்கிலப் படையைச் சேர்ந்த ஏ.எப்.ஹார்வி சகோதரர்கள் "கோரல்மில்" என்ற பஞ்சாலையை 1888ல் தூத்துக்குடியில் ஆரம்பித்தனர். இயந்திரத்தால் பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கும் தொழில்நுட்ப முயற்சி 1894ல் தொடங்கினர்.
இங்கிலாந்திலிருந்து வந்த ஏ அண்டு எம் ஹார்வி கம்பெனியார் பருத்தியை பஞ்சாக்கும், நூலாக்கும் தொழில் செய்து கொண்டிருக்க, ராலி சகோதரர்கள் என்ற மற்றொரு கம்பெனியார், நீராவியை உபயோகித்து பருத்தியை பஞ்சாக்கினார்கள். இவர்களுக்கு தூத்துக்குடி துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் முக்கிய அங்கம் வகித்தது.
தூத்துக்குடியில் சுதந்திர போராட்டம்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில், தூத்துக்குடி இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் ஓர் அரணாகிவிட்டது. வ.உ.சிதம்பரம் பிள்ளை ஓட்டப்பிடாரத்தில் பிறந்து, தூத்துக்குடியில் கல்வி கற்று, திருச்சியில் பிலீடர் பட்டம் பெற்று, தன் வழக்கறிஞர் தொழிலை தூத்துக்குடியில் 1900ம் ஆண்டு குடிபுகுந்தார்.
தேசிய உணர்ச்சியையும், சுய ஆட்சி பற்றையும் மக்கள் மத்தியில் பரப்ப, தூத்துக்குடியில் "விவேகபானு" என்ற தமிழ் பத்திரிக்கையை ஆரம்பித்தார். அப்பத்திரிக்கை மூலம் சமூக சீர்திருத்தங்கள் செய்யவும் அவர் முயன்றார்.
கடற்கரைப் பகுதி இடங்களுக்கு, பயணிகளையும், வணிகப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல ஆங்கிலேயருக்கு இருந்த ஏகபோக உரிமையை முதலில் தாக்கி ஒழிக்க முயன்றார். ஓர் சுதேசிய கம்பல் கம்பெனியை உருவாக்க, நிதி திரட்டுவதற்கு இந்தியர்களிடையே பங்குரிமைகளை விற்றார். நிதி திரட்ட, மிக ஆர்வத்துடன் இந்தியா முழுவதும் அவர் அலைந்து, இறுதியில் இரண்டு நீராவிக் கப்பல்கைள வாங்குவதற்கு மும்பை சென்றார்.
அந்த கப்பல்கள் 1907ம் ஆண்டு ஜூன் முதல் தேதி தூத்துக்குடி வந்து சேர்ந்தன. "எஸ்.எஸ்.கேலியா" பெயர்கொண்ட முதல் கப்பல் மேல்தளத்தில் வ.உ. சிதம்பரம்பிள்ளை அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் வந்த இரண்டாவது கப்பலின் பெயர் "எஸ்.என்.லாவோ". ஒரு தேசிய வீரனுக்கு அளிக்கவேண்டிய கெளரவத்துடன் வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியில் வரவேற்கப்பட்டார்.
இவ்வாராக இந்தியாவிலேயே முதல் "சுதேச நீராவிக் கப்பல் கம்பெனி" தோன்றி, ஆங்கில காலணி ஆதிக்க வேறுபாடுகளை அறுக்கும் இந்திய மக்களின் கூட்டு முயற்சியின் சின்னமாக காட்சியளித்தது. இலவச கம்பல் பயணம், சுதேச கம்பெனி அமைப்பார்களை மிரட்டல், ரயில்வே நிலையத்தில் தங்கள் கப்பலுக்கு பயணிகளை சேர்க்க தரகர்களை நியமித்தல் போன்ற பல நேர்மையற்ற முறைகளை பிரிட்டிஸ் கம்பெனியார் கையாண்டனர்.
சோதனையும் வேதனையும் நிறைந்த இந்த நேரத்தில் சிதம்பரனாருக்கு இரு கரங்கள் போல் இரு நண்பர்களின் அரிய ஒத்துழைப்பு கிடைத்தது. ஒருவர் தீப்பொறிக்கும் தேசியவாதி சுப்பிரமணியசிவா மற்றொருவர் பிரசங்க சிங்கமென்றழைக்கப்பட்ட பத்மநாத அய்யங்கார்.
சுதேசியத்தையும், அன்னியநாட்டு பொருட்களை தவிர்க்கவும் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், உள்நாட்டு தொழில்களை உற்சாகப்படுத்தவும், 1908ல் "தூத்துக்குடி மக்கள் சங்கம்" என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வ.உ.சி. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் அடிமை தனத்தை தூக்கி எறிய இந்திய மக்கள் ஒன்று திரண்டு அணிவகுத்து நிற்கவேண்டுமென பேசினார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் சிதம்பரம்பிள்ளை செயலை தேச துரோகமாக கருதி அவரை கைது செய்து. திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாட்டை விட்டு வெளியேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவே, அவர் தண்டனை 6ஆண்டுகால கடுங்காவலாக குறைக்கப்பட்டது. மக்களுடைய திறமைவாய்ந்த தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதால், பழி வாங்கும் உணர்ச்சி வசப்பட்ட மக்கள் சமுதாயத்தில் அமைதியற்ற ஓர் நிலை தோன்றியது.

அரசாங்கத்தை எதிர்க்க, பல ரகசிய சதிக்குழுக்கள் செயல்பட ஆரம்பித்தன. இந்த சூழ்நிலையின் உச்சக்கட்டமாக 1911ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி வாஞ்சு ஐயர் என்னும் ஓர் தீவிர புரட்சிக்காரர் ஓர் ரகசியக் குழுவில் உறுப்பினர் கலெக்டர் ஆஷை அவர் கொக்கிகுளத்திற்கு பயணம் செய்யும் பாதையில் மணியாச்சி இரயில் சந்திப்பில் சுட்டுக் கொலை செய்தார்.

இது சம்பந்தமான வழக்கு விசாரணையில் ரகசிய அரசியல் குழுக்கள் சதிதிட்டங்கள் வெளிப்பட்டன. ஒரு இரும்புக் கரங்கொண்டு அரசாங்கம் இந்த தீவிரவாதிகளின் கூட்டங்களையும், செயல்களையும் அடக்கினர். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின், மஹாத்மா காந்தியின் தலைமையில் உருவான சுதந்திர போராட்டத்தால் தூத்துக்குடி ஓர் சிறப்பான பங்கினை வகித்தது. சிதம்பரம்பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டவுடன் சுதேசிய கப்பல் கம்பெனிக்கு பல இன்னல்கள் ஏற்பட்டு இறுதியில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
புதிய துறைமுகம் வளர்ச்சி
1920ம் ஆண்டு முதல் ஒரு முதிர்ச்சியடைந்த துறைமுகம் தேவை என்று உணர ஆரம்பித்தனர். 1930ல் சென்னை அரசாங்கம் சன் வால்டே பாரிலிஸ்டரின் பங்காளிகளையும் (Partner) தூத்துக்குடியில் ஓர் ஆழமான கடல் துறைமுகத்தை அமைப்பதற்கு சாத்தியக் கூறுகளையும், பரிசீலனை செய்ய நியமித்தது.
பெரிய துறைமுகம் அமைப்பதற்கு சாதகமாக உள்ளது என்று சர்.வாட்வேஹரி ஒரு திட்டம் சமர்ப்பித்தார். இதற்கு முற்றிலும் மாறாக சன்.ராபர்ட் பிரிஸ்டவ் ஒரு திட்டத்தை படைத்தார். அத்திட்டத்தின் பெயர் சர் பிரிஸ்டவ் திட்டம். அவர் திட்டத்தின்படி ஆழ்கடல் துறைமுகம் முயல்தீவில் கட்டப்பட வேண்டும் அதன் மதிப்பீடு 60லட்சம் ரூபாய் ஆகும். இதை பரிசீலனை செய்ய அரசாங்கம் "பால்மர் குழு" என்றழைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்து அந்தக் குழு பிரிஸ்டவ் திட்டத்திற்கு சில புதிய அம்சங்களை சேர்த்தது. அதாவது முயல்தீவில் ஒரு கால்வாய் தோண்டப்பட்டு கடற்கரையின் முன் பகுதியிலேயே துறைமுகம் கட்டப்படவேண்டும். இந்த அமைப்பிற்கு 200ஏக்கர் தரைப்பகுதி ஆக்கிரமிப்பு செய்ய யோசனை கூறப்பட்டது.
இரு திட்டங்களுக்கும் செலவு தொகையை மதிப்பிட பிரிஸ்டவ் குழு மீண்டும் கோரப்பட்டது. பிரிஸ்டவ் திட்டத்திற்கு 120 லட்சம் ரூபாயும், பால்மர் திட்டத்திற்கு 160 லட்சம் ரூபாயும் மதிப்பிடப்பட்டது. இவ்வளவு அதிகமான செலவுக்கு அரசாங்கம் தயாராக இல்லாததால் திட்டடங்கள் அமுல் நடத்துவது 1930ல் தள்ளிப்போடப்பட்டது.
இதற்கிடையில் தொழிலும், வியாபாரமும் வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் புதிய ரோடுகளும், இருப்புப் பாதைகளும், போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவே, தூத்துக்குடி பின்னணியாக விளங்கிய முக்கிய இடங்களுடன் அவையெல்லாம் இணைக்கப்பட்டன. உற்பத்தி பொருட்களும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, தூத்துக்குடி துறைமுகத்தில் குவிந்துகொண்டிருந்தன.
1930ல் மாகானம் முழுவதும் அகல பாதைகள் போட திட்டம் வகுக்க, அரசாங்கம் திரு.விப்பனை நியமித்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் நிலையைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, மிகவும் முக்கியம் வாய்ந்த தூத்துக்குடி துறைமுகம் நெடுஞ்சாலை ரோடுகளுக்கு தூரம் என்று கூறி, தூத்துக்குடியுடன் அவைகளை இணைக்கும் ஓர் போக்குவரத்து திட்டத்தை வரைந்து கொடுத்தார். அவர் கருத்தின்படி, வணிகப் பொருட்கள் தூத்துக்குடிக்கு எளிதில் வந்து சேருவதற்கு வசதியாக பல பெரிய ரோடுகள் போடப்பட்டன. ஆனால் துறைமுகத்தை விரிவாக்க திட்டம்,1939-லும் 1940-லும் மேலும் யோசிக்கப்பட்டு, நிதிக்குறைவால் கைவிடப்பட்டது.
இக்கால கட்டத்தில்தான் நம்நாடு சுதந்திரம் அடைந்தது. அதன்பிறகு 1949-ல் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பெயரில் ஒரு சுதேசி நீராவி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடலில் செலுத்தப்பட்டது. சிதம்பரம்பிள்ளை அவர்களின் ஞாபகச் சின்னமாக இந்த கப்பலை அன்று இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த சி.ராஜகோபாலச்சாரியார், கடலில் மிதக்கவிட்டார்.

ஒரு புதிய திட்டத்தை வகுத்து கொடுத்தார். இதற்கிடையில் சேதுசமுத்திரம் கால்வாய் திட்டத்தையும் அதனால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏற்படும் விளைவுகளை யெல்லாம் கணிக்க சர்.ஏ.ராமசாமி முதலியார் தலைமையின்கீழ் ஒரு புதுக்குழு, தூத்துக்குடி துறைமுகத்தை உடனடியாக விரிவாக்குவதன் அத்தியாவசியத்தை கோடிட்டுக்காட்டி, அதனால் சேது சமுத்திர திட்டமும், தென் மாநிலமும் பயனடையும் வாய்ப்புகளையெல்லாம் தங்கள் அறிக்கையில் பரிந்துரைத்தனர்.
தூத்துக்குடி துறைமுக நிறைவு திட்டத்தில் மக்களின் ஒன்று திரண்ட ஆர்வத்தை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டிய ஆண்டு 1956 என்று உறுதியாகக் கூறலாம். மக்களின் நீண்ட நாள் ஆவலின் ஒளிமயமான அடையாளமாக அந்த வருடத்தில்தான், தூத்துக்குடியின் இன்றைய புதிய துறைமுகத்தின் மூலைக் கல்லை நாட்டிய, தூத்துக்குடி துறைமுக அபிவிருத்தி சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்குபின்னர்தான் மக்களின் ஆக்கபூர்வ முயற்சியெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்டு, துறைமுக வளர்ச்சி பணித்திட்டம் வேகமடைந்தது.

இந்த சங்கத்தின் ஆதரவில் வியாபார கழக உறுப்பினர்கள், பழைய துறைமுக அறக்கட்டளை அங்கத்தினர்கள் அடங்கிய ஓர் தூதுக்குழு மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது. இவர்கள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, திட்டக்குழு தலைவர், இதர சம்பந்தப்பட்ட மாநில, மத்திய அமைச்சர்களையெல்லாம் சந்தித்து இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டு திட்டகால அளவில் தூத்துக்குடி துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியத்தை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்தது. பிரதமர் வாக்குறுதியின்படி திரு.பி.மதிராணியும், திரு. ஜெ.டி.சாக்கோவும் ஆராய்ச்சி செய்து, தமது அறிக்கையில் துறைமுக வளர்ச்சியை பரிந்துரைத்தனர்.

இறுதியில் மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் 1963ல் ஆழ்கடல் துறை வளர்ச்சி பணிகள் துவங்கியது. இது 1944ல் 73கோடி ரூபாயில் முடிவுற்றது. இன்றைய புதிய ஆழ்கடல் துறைமுகம் 1974ல் ஜூலை 11ம் தேதிதான் சேவையை துவக்கியது. இது இந்தியாவில் பத்தாவது பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.1979ல் பழைய துறைமுகமும் புதிய ஆழ்கடல் துறைமுகமும் ஒன்றிணைக்கப்பட்டது.

பழைய துறைமுகம் "பி" பகுதி எனவும், புதிய துறைமுகம் "ஏ" பகுதி எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு துறைமுகமாக இருந்த தூத்துக்குடி துறைமுகம் இன்று நவீனமயமாக்கப்பட்டு இந்தியாவின் 10வது பெரிய துறைமுகமாக விளங்குகிறது.
தூத்துக்குடியின் புவிஅமைப்பு (1 of 1)
தூத்துக்குடி தென்னிந்தியாவில் சுமார் 540கிமீ தூரத்தில் சென்னைக்கு தென்மேற்காக மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடாவிற்கு இந்த மாவட்டம் தெற்கில் தென்மேற்கு திசையில் திருநெல்வேலி மாவட்டம், மேற்கில் வடமேற்கு திசையில் விருதுநகர் மாவட்டம் மற்றும் வடக்கே ராமநாதபுரம் மாவட்டமும் அமந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4621ச.கி.மீ. ஆகும் தூத்துக்குடி நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் மற்றும் தாலுகா தலைநகரமாகவும் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஒரு தனி மாவட்டமாக 1986ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து அறிவிக்கப்பட்டது.

நீர்பாசனம்
தூத்துக்குடியில் பெரிய அளவில் எந்தவொரு நீர்த்தேக்கமும் இல்லை. ஆனால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு நீர்த் தேக்கங்கள் மிக அருகில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி ஆறு முக்கிய பாசன வசதியை கொடுக்கிறது. தாமிரபரணி ஆறு தவிர வைப்பாறு விளாத்திகுளம் தாலுகாவிலும், கருமேனி ஆறு சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் தாலுகாவிலும் பாசன வசதியை அளிக்கிறது. மேலும் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் எப்போதும்வென்றான் கிராமத்தில் ஒரு சிறிய நீர்த்தேதக்கம் உள்ளது.

Sunday, December 11, 2011


www.youtube.com

I always consider my Identity as a Tamil. Just Tamil. No further Nationality is required for me. But even more than that, I primarily consider myself as a Human. I love my Mother Earth. I like to save my environment and Earth from ruthless exploitation which results in global warming and climate change. That’s the reason I oppose the Nuclear Power Plant in Kudankulam. Not only in Kudankulam, I will also oppose Nuclear Power Plant in Jaitapur or even in Kabul. But Kudankulam being in Tamilnadu gives me more vigor to oppose it as Tamilnadu is my own Land

While I oppose the Nuclear Power plant for Environmental reason, I also oppose the construction of Dams. I am an environmentalist and I have to oppose the Dams as it is dangerous to the environment. Dams are unnatural structures which disturbs the natural River Ecosystem. I am against Dams of any kind. Whether it is New Dams or Old Dams, Dams are bad. Dams were created not just for Storing water for irrigation. It’s only a starting point. Human greed takes it further to generate Hydroelectricity, drawing water for Industrialization and so on. And in the process Dams pose a threat to the environment

Kerala says it will demolish the old Dam and construct a new Dam. How will a new Dam save Kerala? It will also have to face earth quakes? It can also get cracked in an earth quake. In fact many Scientists believe that “Dams create the Earthquakes”. The Huge amount of water stored in the reservoirs is the cause for many Earth quakes. So, Kerala’s theory that a new Dam will save them is as theatrical as to say the old Dam will fail in an Earth quake. Both new and old Dams are vulnerable in the event of an Earth quake. Adding to this, there is a scientific proof to link Dams as a cause for Earthquakes.

Let me quote a Scientific theory here (http://www.internationalrivers.org/node/3845)
“Earthquakes can be induced by dams. Globally, thereare over 100 identified cases of earthquakes that scientists believe weretriggered by reservoirs. The most serious case may be the 7.9-magnitude Sichuanearthquake in May 2008, which killed an estimated 80,000 people and has beenlinked to the construction of the Zipingpu Dam.”

If Kerala’s claim that Mullai Periyaru Dam is in a seismic zone, it holds true for the new Dam it plans to replace Mullai Periyaru. As nature of Earthquakes is unpredictable, so does the stability of the Dams even if it is constructed with ultra-modern technology. There is no 100% safety for the new Dams or Old Dams.

So, what’s the aim of Kerala? What is the ultimate motive behind this massive PR campaign of Kerala and Malayalees ?


As much as the Kudankulam issue which tries to give power to the Business elites, Kerala’s cry about Dam safety has more Electricity and Economic reason than Safety. Kerala’s PR machine does not oppose the Dams in total. They selectively oppose only Mullai Periyaru Dam which is in the control of Tamilnadu. They don’t oppose the Idduki Reservoir which gives electricity to Kerala. If Dams are totally bad as “Dam 999” says, why would they want to construct a new Dam? Should not they get rid of all Dams in Kerala (Like the Elwha Dam removal in USA) ?

The whole issue comes down to the perception of Kerala that Tamilnadu pays less taxes for the water and electricity it produces from the Mullai Periyaru Dam and that Kerala could not meet its state demand of electricity from its Idukii reservoir. If Kerala needs to reprice the taxes that Tamilnadu pays, it is only reasonable for it to come out openly and ask for new taxes based on the current Inflation.
But Kerala indulges in fear mongering to achieve multiple purposes.

Constructing a new dam will hit multiple mangoes in one stone for Kerala

  • The lease of the land to Tamilnadu for 999 years will expire automatically with the construction of new dam.
  • Tamilnadu will lose its rights over the land to get water and generate electricity
  • Kerala can use the new dam to generate electricity to meet its state Demand

Power and Economy are the primary motive behind Kerala's fear mongering PR drive. In this PR campaign Kerala unleashes many fictional stories, such as Kerala's claim that the Agreement of 1886 to give Tamilnadu the rights for 999 years was not a fair deal and it was thrust on it in by the erstwhile British Presidency of Madras on the Princely state of Travancore. Kerala’s fiction is that the mighty British empire forced the agreement on the small Princely state of Travancore. However, in 1970 the Kerala (Chief Minister C. Achutha Menon) and Tamil Nadu governments signed a formal agreement to renew the 1886 treaty almost completely. In Independent India, when Tamilnadu lost its lands such as Devikulam and Peermade to Kerala, it can only be fictional to say the Agreement was forced on Kerala.

May be in 1970 Kerala Politicians did not foresee the Power challenges in a modern World. Since 1970 the demand for Electricity has grown in Kerala and it needs Mullai Periyaru to meet its demand. So, a new Dam is a clever ploy to kick out Tamilnadu and take full control of the Mullai Periyaru Dam

Kerala’s well-oiled PR machines uses sleight of hand tactics to hide the actual reason and fabricates Mullai Periyaru into a safety issue. Kerala claims that it is ready to bear the cost of constructing a new Dam and it is magnanimous enough to provide water to Tamilnadu. It portrays as if it is concerned only about the safety of the people. But the actual fact is, the day Kerala starts its new Dam construction, Tamilnadu loses all its rights as the old lease agreement will expire automatically. It is a well calculated game plan of Kerala. After all, Malayalee IAS, IPS and IFS officers run entire India. So, they know better lobbying than slogan shouting Tamils.

Kerala is a water surplus state. Kerala is not dependent on Agriculture and does not grow crops such as Paddy in its river basin. Kerala imports most of its food products from Tamilnadu. So, water is not the problem here. It’s again the power politics, politics of money and Power, is playing here. The same power issue which haunts Tamils at Kudankulam is haunting us in Mullaiperiyaru also.


As I said in this article, Dams are always Dangerous and we should avoid Dams. Let’s start a debate of carefully demolishing all the many mindless Dams constructed in many Rivers. Tamilnadu being the downstream state of many rivers was a victim of many mindless Dams constructed across rivers such as Cauvery. I am all for demolishing such Dams in a systematic fashion like the Elwha Dam removal in USA. Let’s carefully demolish all Dams across Cauvery. Let Nature runs its own course, whether it is Cauvery or Periyaru river.

******************
Tamils were just reduced to slogan shouting, Tamil jingoistic herd; Look at Malayalees who have unleashed their PR machines in a much more sophisticated pattern. From Hollywood movies to Save Mullaperiyar campaign in Facebook, their campaign is a well-oiled PR Machine.

Tamils need a better PR machine to expose Kerala’s Political Games. Let’s bring out these facts rather than just slogan shouting Tamil jingoism.

Let's think about how we can do it...



***************
Please spend some time to watch these videos about Mullai Periyaru Dam - The Real story of Mullai Periyar Dam


முல்லைப் பெரியாறு -தமிழ் நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள் இடத்திலேயே -
தங்கள் செலவிலேயே -
புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.
கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,
புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -

இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட,
படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான்
அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்
சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -
நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்
அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –
சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,
நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக -
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,
நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல்
இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,

கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,
கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,
சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்
என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,
கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.

வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.
உடனடித் தேவை பலமான பதில் தாக்குதல்.
தமிழகம் முழுவதும் சேர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும்.
ஒரே குரலில் பேச வேண்டும்.
உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.
அகில இந்தியாவிற்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்.
நம் தரப்பு நியாயம் அனைவருக்கும் புரியும்படி –
சுப்ரீம் கோர்ட்டுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் !
நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்c
www.youtube.com

Thursday, November 17, 2011


winter sesion start at delhi..

11.11.(20)11 - 11 am. 11. min. 1 sec.
CAR PARK IN PRAGADI MAIDAAN EXPO - NEW DELHI...
டெல்லி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற ஷிவானி பெருமாளின் குச்சிபிடி நடனம்.


ஐந்து கரத்தனை... ஆணை முகத்தனை....